திங்கள், 22 ஆகஸ்ட், 2016

கரடியின் பிடியில் பங்குசந்தை ???

   பங்கு சந்தை அன்பர்களுக்கு வணக்கம், இந்த பதிவின் முக்கிய நோக்கமே வர்த்தகர்களை விழிப்புணர்வு ஏற்படுத்தவே.அதாவது  பங்கு சந்தை வரும் நாட்களில் கரடிகளின் கையில் அகப்பட காத்திருக்கிறது. சரியாக சொல்லவேண்டும் என்றால் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 20 வரை, இந்த குறிப்பிட்ட நாட்களில் எப்பொழுது வேண்டுமானாலும் மிக பெரிய சரிவை சந்திக்கலாம். இது முற்றிலும் கணிப்பு அல்லது எதிர்பார்ப்பு மட்டுமே. இது கண்டிப்பாக நடக்கும் என்று சொல்லவில்லை ஆனால் 99% நடைப்பதற்க்கு வாய்ப்பு இருப்பதாகவே நாங்கள் கணிக்கிறோம். இது fundamental  & technical அனாலிசஸ்க்கு அப்பாற்பட்ட்து. இது முற்றிலும் ஜோதிட அறிவியல் மற்றும் கிரக கோச்சார நகர்வுகளை மட்டும் கொண்டு கணிக்கப்பட்டுள்ளது.  
                அனைவரும் இதை நம்பவேண்டும் என்ற அவசியம் இல்லை, அதே நேரம் அனைவரையும் விற்று வாங்க வேண்டும் என்றும்  நாங்கள் பரிந்துரைக்கவில்லை. எங்களது நோக்கமே குறைந்தபட்ஷம் இந்த குறிப்பிட்ட நாட்களில் வர்த்தகம் செய்வதை தவிர்க்கவே. வரும் நாட்களில் nifty குறைந்தபட்சம் 600 புள்ளிகள் முதல் 1000 புள்ளிகள் வரை சரிவை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே மிகவும் கவனமாக வர்த்தகம் செய்யயவும்.

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

கேள்வி பதில்

கேள்வி 1
பங்கு சந்தையில் 2 பேர் ஈடுபடுகிறார்கள் அதில் ஒருவருக்கு ஜாதகம் சாதகமாக உள்ளது மற்றோருவருக்கு பாதகமாக உள்ளது என்று வைத்துக்கொள்வோம்,  இப்பொழுது சாதகமாக உள்ளவர் வர்த்தகம் செய்வதையே பாதகமாக உள்ளவரும்  செய்தால் இருவரும் லாபம் அடைவார்களா அல்லது நஷ்டம் அடைவார்களா ???
பதில் 
அருமையான கேள்வி, நிச்சசயம் சாதகமாக உள்ளவருக்கு லாபமும் பாதகமாக உள்ளவருக்கு நஷ்டமும் ஏற்படும். எப்படி என்றால் இந்த மாதிரி பல சோதனைகளை நங்கள் செய்துவிட்டோம் , இப்படி இரு வேறு ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கும் தலா ஒரு லட்ஷம் கொடுத்து ஒருமண்டலம் (48 நாட்கள்) வர்த்தகம் செய்ய சொல்லுங்கள், நிச்சயம் நாங்கள் சொல்வதே நடந்திருக்கும், காரணம் சாதகமாக உள்ளவர் சந்தை இறக்கத்திலும் ஏற்றத்திலும், லாபத்திலும் நஷ்டத்திலும் ஒரே மாதிரி மனநிலையுடன் இருப்பார், ஆனால் பாதக ஜாதக அமைப்பு உள்ளவர் நஷ்டம் ஏற்படும் போது பதட்டத்திலும் லாபம் வரும் போது ஒரு வித மமதையில் அடுத்தகடட வர்த்தகத்தை முதலாமவர் செய்வதற்குள் ஏதேனும் தவறாக செய்து மாட்டிக்கொள்வார். இதில் நாங்கள் சொல்வதெல்லாம் ஒருவருடைய கிரக சூழ்நிலைகள் அவர் மனநிலையை நிச்சயம் மாற்றி விடும் என்பதே. 

Kaalabiravaa almanac

Kaalabiravaa almanac